search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிஷா கொய்ராலா"

    • இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.

    அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • இவர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

    நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனிஷா கொய்ராலா 2010-ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.


    இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் "நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்று பேசினார்.

    • தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா.
    • இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.

    நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

    மனிஷா கொய்ராலா

    மனிஷா கொய்ராலா

     

    மனிஷா கொய்ராலா தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவர் மணிரத்னம் படமான பம்பாய் படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பம்பாய் வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் என்னுடைய 20 வயதில் அம்மாவாக நடித்ததால் அதை செய்ய வேண்டாம் என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள்.

     

    அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு பாட்டி வேடங்கள் கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் மணிரத்னம் படத்தை மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். இந்தப் படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது என்று கூறியிருக்கிறார்.

    இந்தியன், முதல்வன் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார்.  

    இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

    மனிஷா கொய்ராலா

    மேலும் அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில், 'இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
    ×